Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

திருப்பத்தூர் அருகே : பேக்கரி கடை உரிமையாளரை கத்தியால் குத்திய இளைஞர் :

திருப்பத்தூர்

பேக்கரிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (60). இவரது மகன் வீரபத்திரன்(36). இவர், அதே பகுதியில் பானிப்பூரி மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீரபத்திரன் தனது கடையில் வியாபாரத்தில் இருந்தபோது, மதுபோதையில் கடைக்கு வந்த அதேபகுதியைச் சேர்ந்த ரமேஷ்(29) என்பவர், இலவசமாக பானிப்பூரி கேட்டு வீரபத்திரனிடம் தகராறு செய்தார்.

அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வீரபத்திரனை சரமாரியாக குத்தி விட்டு தப்பி யோடினார்.

இதில், படுகாயமடைந்த வீரபத்திரனை கடை ஊழியர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரமேஷை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x