Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

மேல்மலையனூர் கோயில் ஊஞ்சல் உற்சவம் ரத்து :

விழுப்புரம்

மேல்மலையனூர் கோயிலில் நாளை மறுதினம் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) அமாவாசை நாளன்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

ஆனால் கோயிலில் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் அனைத்து வகையான தரிசனங் களுக்கும் அனுமதிக்கப் படுவார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத் துத்துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப் படாது என இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த ஒரு ஆண்டுகளாக அமாவாசை நாளன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) அமாவாசை நாளன்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x