Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM
மதுரையைச் சேர்ந்த வினோத்ராஜ் (32) டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு பெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த வினோத்ராஜுயின் உடலை கைப்பற்றிய ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் அன்று அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை விடவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் அதையும் மீறி இந்த கார் தொழிற்சாலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்கப்படவில்லை என்று, சக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT