Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM
காரைக்கால் தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான கே.ஏ.யு.அசனாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், தேர்தலுக்கு முன்னதாக சில நாட்கள் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல் வீட்டுத் தனிமையில் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, பாதுகாப்பு கவச உடையுடன், காரைக்காலில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அப்போது, திமுக பிரமுகர்கள் முகமது ஹுசைன்(62), சுலைமான்(61) ஆகியோர், அவரை செல்போனில் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை எம்எல்ஏ தரப்பினர் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் முகமது ஹுசைன், சுலைமான் ஆகிய இருவர் மீதும் காரைக்கால் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT