Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி நேற்று வீடு திரும்பினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 6 மணிக்கு மேல், பிபிஇ கிட் கவச உடையணிந்து வந்து வாக்களித்தார்.
இந்நிலையில், கரோனா பாதிப்பு குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். இருப்பினும், சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT