Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில் தனியார் இடத்தில், தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் இருந்து வெளி வரும் கதிர்வீச்சால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பால்பண்ணை அருகே பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், திருக்கோகர்ணம் போலீஸார் சமாதானம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்துபோகச் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT