Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

கிணற்றில் மூழ்கி : தந்தை, மகன் உயிரிழப்பு :

திருப்பத்தூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற தந்தையும், மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம்கந்திலி அடுத்த கசிநாயக் கன்பட்டி கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாலாஜி(33). இவரது மகன் ஜெகதீசன்(4). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது.

குளிக்கும் போது ஆழமானப் பகுதிக்கு சென்ற இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த கந்திலி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பாலாஜி, ஜெகதீசன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x