Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் ஆய்வு :

தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.

தி.மலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் செங்கம், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. ஆரணி தச்சூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்த மையங்களில் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவிபாட் கருவிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைகளுக்கு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

பாதுகாப்பு அறையின் கதவு, நடைபாதை மற்றும் வளாகம் என பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கவுள்ளனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு துணை ராணுவப்படையினரின் பாதுகாப்பும், வெளிப்பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் பாதுகாப்பு, வளாகத்தின் நுழைவுப் பகுதியில் உள்ளூர் காவல் துறையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்கிடையில், திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர், பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கும் பணியையும் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x