Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

திமுக பிரமுகர் உயிரிழப்பு :

தாராபுரத்தைச் சேர்ந்தவர் வீரசுந்தரி பழனிச்சாமி (62). திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும், தாராபுரம் ஒன்றியக் குழுஉறுப்பினராகவும் இருந்தார்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மணக்கடவு வாக்குச்சாவடியை பார்வையிட்ட பின், நகரை நோக்கி காரில் வந்துள்ளார். காரை அவரே ஓட்டி யுள்ளார்.

பழநி சாலையில் வந்தபோதுகட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாகதெரிவித்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x