Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றிய தன்னார்வலர்கள் உணவின்றி தவிப்பு :

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 3,833 வாக்குச்சாவடி மையங்களில் ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு 2 தன்னார்வலர்கள் விதம் 7,666 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாக்குச்சாவடி மையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு கையுறைகள், முகக்கவசங்கள், சானிடைசர் போன்றவை வழங்குதல், தெர்மல் ஸ்கேனர் கருவியை கொண்டு உடல் வெப்பத்தை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

இவர்கள் காலை 6 மணிக்கே பணியாற்ற வந்துள்ளனர். இவர்களுக்கு காலை 11 மணி ஆகியும் காலை உணவு வழங்கப்படவில்லை. ஆனால், வாக்குச்சாவடியில் பணியாற்றிய மற்ற அலுவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இவர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. உணவு வேண்டி சக அலுவலர்களிடம் கேட்டால் உங்களுக்கு யார் பணி வழங்கினார்களோ அவர்களிடம் சென்று பெற்றுக் கொள்ளுங்கள் என பதிலளித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, தன்னார்வலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x