Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

ஈகுவார்பாளையத்தில் அதிமுக - திமுக இடையே மோதல் :

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட ஈகுவார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று மதியம் 3 மணியளவில், வாக்குச்சாவடி மையத்துக்கு வெளியே 100 மீட்டர் தொலைவுக்குள், அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள், தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்களாம். அப்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் இரு தரப்பினரையும் அப்புறப்படுத்த முயன்றனர்.

எனினும், மோதல் தொடர்ந்ததால், கூடுதலாக காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டு, மோதலில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தி, அனைவரையும் கலைந்துபோகச் செய்தனர்.

இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள், பதறியடித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x