Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

திருவள்ளூரில் அதிமுகவினரை கண்டித்து - திமுகவினர் சாலை மறியல் :

திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட சத்தரை, காவங்கொளத்தூர், கூவம், கொண்டஞ்சேரி, கீழச்சேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் அதிமுகவினர், இரட்டை இலை சின்னம் பொருத்திய டோக்கனை வழங்கி, ஒரு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் தருவதாக கூறினார்களாம்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சத்தரை கடம்பத்தூர்- பேரம்பாக்கம் சாலையில் திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மப்பேடு போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானமாகி, அங்கிருந்து கலைந்துசென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x