மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதம் :

நாங்குநேரி தொகுதி, ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.                                  படம்: மு. லெட்சுமி அருண்.
நாங்குநேரி தொகுதி, ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர். படம்: மு. லெட்சுமி அருண்.
Updated on
1 min read

சட்டப் பேரவை தேர்தலில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 61.15 சதவீதம், தென்காசி மாவட்டத்தில் 72.58 சதவீதம், தூத்துக்குடி மாவட்டத்தில் 69.84 சதவீதம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 68.8 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:

திருநெல்வேலி

தென்காசி

தூத்துக்குடி

இருப்பினும் மிகத்துல்லியமான வாக்குப்பதிவு விகிதம் அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த பிறகு, அதில் உள்ள படிவங்களை சரி பார்த்த பின்னரே தெரியவரும். எனவே, துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் இன்று (ஏப்.7) தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 6 சட்டப்பேரவை தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி 9.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி 21.72 சதவீதம், 1 மணி நிலவரப்படி 33.79 சதவீதம், 3 மணி நிலவரப்படி 51.16 சதவீதம், மாலை 5 மணி நிலவரப்படி 62.41 சதவீதம்பேரும் வாக்களித்திருந்தனர். 7 மணிக்குவாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில்,கடைசிநேரம் வரை வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 10,81,432 வாக்குகள் பதிவாகியிருந்தன. இது 68.80 சதவீதம் ஆகும். அதிகபட்சமாக கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் 75.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக பதிவான வாக்குகள்: கன்னியாகுமரி- 75.34, நாகர்கோவில் - 66.70, குளச்சல் 67.45, பத்மநாபபுரம் 69.82, விளவங்கோடு 66.90, கிள்ளியூர் 65.85.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in