Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

ஆளும் கட்சிக்கு சேவை செய்யும் நிறுவனமாக தேர்தல் ஆணையம் : திருமாவளவன் குற்றச்சாட்டு

அரியலூர்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிக்கு சேவை செய் யும் நிறுவனமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி குற்றம்சாட்டினார்.

அரியலூர் மாவட்டம் அங்க னூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தேர்தல் ஆணை யத்தின் உதவியுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அதிமுக செயல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக உள்ளவர் களுக்கு சேவை செய்யும் நிறு வனமாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும் நிறுவனமாகவே மட்டுமே உள்ளது. தேர்தல் விதி மீறல் களை கட்டுப்படுத்தும் ஒரு தன் னாட்சி அமைப்பாக இல்லாதது வேதனை அளிக்கிறது.

தேர்தலில் திமுக கூட்டணி நூறு சதவீதம் வெற்றி பெறும். திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக் கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x