Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
செங்கல்பட்டு தொகுதியில் பல வீடுகளில், தாங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கப்போவதாகவும் மற்ற கட்சிகள் வாக்கு கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மற்ற tகட்சியினர் வாக்கு சேகரிக்க சென்றபோது சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, "வாக்கு கேட்பது அனைவரின் உரிமை. எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவெடுப்பது மக்கள்தான். ஆனால், சிலர் இதுபோன்ற நோட்டீஸை ஒட்டி பிரச்சாரம் செய்யவிடாமல் செய்திருப்பது அவர்களுக்கே கடும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பிட்ட கட்சியினருக்கு தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டதால்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர். வாக்காளர்கள் இதற்கு நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT