Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா - ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.2.23 லட்சம் பறிமுதல் :

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்தி ருந்த ரூ.2,23,500-ஐ தேர்தல் பறக் கும் படையினர் பறிமுதல் செய் தனர்.

ராமநாதபுரம் அருகே அம்மன் கோவில் பெட்டிக்கடை பகுதியில் பறக்கும் படையினர் சோதனை யிட்டனர். அங்கு பணப்பட்டுவாடா செய்தவர், பணத்தை வீசியெறிந்துவிட்டு தப்பினார். ரூ.79,000-ஐ பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

சாயல்குடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் முதுகுளத்தூர் தொகுதி பறக்கும் படையினர் சோதனையிட்ட போது, பணப்பட்டுவாடா செய்த பாஜகவைச் சேர்ந்த சதீஷ் குமார் உட்பட 5 பேரை பிடித்து விசாரித்தனர். ரூ.82,500-ஐ பறி முதல் செய்தனர். 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சாயல்குடி போலீஸார், சதீஷ்குமாரை கைது செய்தனர். பரமக்குடி சின்னக்கடை பகுதியில் பறக்கும்படையினர் சோதனை நடத்தியபோது, பணப் பட்டுவாடா செய்து கொண்டி ருந்த பரமக்குடியைச் சேர்ந்த கார்த்திகேயன், அய்யப்பன், மகாராஜன் ஆகியோரிடம் இருந்து ரூ.43,000-ஐ பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கமுதி அருகே ராமசாமிபட்டி ஊராட்சி அலுவலகம் அருகே தேர்தல் அலுவலர்கள் சோதனை நடத்தியபோது, இளையான் குடியைச் சேர்ந்த கர்ணன், ராமசாமிபட்டியைச் சேர்ந்த சிலர் முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்காக பணப் பட்டுவாடா செய்ததாக தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ.19,000-ஐ பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கமுதி போலீஸில் புகார் செய்தனர். கர்ணன், திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன், ராமசாமிபட்டியைச் சேர்ந்த தங்கமணி, கார்மேகம், பொன்னுச்சாமி, மாரியப்பன், முருகேசன், நாகராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x