Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் - பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு :

விருதுநகர் மாவட்டத்தில் 270 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவையாகக் கண்டறியப் பட்டுள்ளன. அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மொத்தம் உள்ள 2,370 வாக்குச் சாவடிகளில் 50 சதவீத வாக்குச் சாவடிகளை வெப் கேமரா மூலம் காண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் உள்ள 443 வாக்குச்சாவடிகளில் 44 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்து. அதேபோல், திருப்பத்தூர் தொகுதியில் உள்ள 410 வாக்குச்சாவடிகளில் 32 பதற்றமானவை.

சிவகங்கை தொகுதியில் உள்ள 427 வாக்குச்சாவடிகளில் 29 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

மானாமதுரை தொகுதியில் உள்ள 399 வாக்குச்சாவடிகளில் 58 பதற்றமானவை.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,679 வாக்குச்சாவடிகளில் 163 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளை வெப் கேமரா பொருத்தி கண் காணிக்கின்றனர். மேலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x