பலத்த காற்றுடன் தென்காசியில் மழை :

பலத்த காற்றுடன் தென்காசியில் மழை  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியது. இந்நிலையில், நேற்று காலையில் இருந்து காற்று இல்லாததால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது. மாலையில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் ஒரு சில பகுதிகளில் மிதமானமழை பெய்தது. தென்காசி, சுரண்டை, பாவூர்சத்திரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in