Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காமநாயக்கன்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பரமசிவம் தலைமையில், உதவி ஆய்வாளர் மரிய இருதயம் மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கோவில்பட்டி ராஜுவ்நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் விஜயராஜனை (40) சோதனையிட்டனர். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.52,650 ரொக்கப்பணம் இருந்தது. பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அமுதாவிடம் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT