

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 70 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதற்காக, 1,783 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டு 12 லட்சத்து 71 ஆயிரத்து 132 வாக்காளர்கள் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை வாக்களிக்க உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்-6) காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,783 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்பாடி தொகுதியில் 349, வேலூரில் 364, அணைக்கட்டில் 351, கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 311, குடியாத்தம் (தனி) தொகுதியில் 408 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, தொங்குமலை, அல்லேரி, ஜார்தான் கொல்லை, பலாம்பட்டு, அத்தியூர் உள்ளிட்ட மலைப்பகுதியில் உள்ள 12 வாக்குச்சாவடிகளுக்கான பிரத்யேக மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று மாலை கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 6,16,028 ஆண்கள், 6,54,960 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 144 பேர் என மொத்தம் 12 லட்சத்து 71 ஆயிரத்து 132 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
தபால் வாக்குகள்
வேலூர் மாவட்டத்தில் காட்பாடியில் 15 பேர், வேலூரில் 17 பேர், கே.வி.குப்பத்தில் 10 பேர், குடியாத்தத்தில் 15 பேர், அணைக்கட்டில் 13 பேர் என மொத்தம் 70 பேர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர்.
கரோனா தடுப்பு
கோவிட் தடுப்பூசி
பாதுகாப்பு நடவடிக்கைகள்