வாக்காளர்களுக்கு பணம் தந்தவர் கைது :

வாக்காளர்களுக்கு பணம் தந்தவர் கைது :
Updated on
1 min read

திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட கனக்கம்மாசத்திரம் அருகேயுள்ள அத்திப்பட்டு கிராமத்தில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக நேற்று தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற பறக்கும் படையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவைச் சேர்ந்த மேகநாதன்(46), வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.12,700 ரொக்கத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கனகம்மாசத்திரம் போலீஸார், மேகநாதனைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in