Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு :

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தச்சாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தீபக்(15). இவர், மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார். அப் போது மாடுகளுக்கு தண்ணீர் எடுக்க, அதே கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றுக்கு சென்றுள்ளார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர், தீபக்கை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் பலன் அளிக்காததால், கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர். அப்போது தீபக்கின் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x