இலங்கையர் இருவர் கைது  :

இலங்கையர் இருவர் கைது :

Published on

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிக்கு நேற்று சட்டவிரோதமாக பைபர் படகில் இருவர் வந்திருப்பதாக மெரைன் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ், அடம்பன் மன்னாரைச் சேர்ந்த பிரதாப் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in