Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: 6 பேர் சிக்கினர் :

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக புகார்கள் எழுந்தன. ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த தெற்குத்தரவையில் பேருந்துநிறுத்தம் அருகே பெட்டிக்கடை முன் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்று பறக்கும் படையினர் விசாரணை நடத்தியபோது பெட்டிக்கடையின் முன் இரு சக்கர வாகனத்தில் இருந்தவர் தான் கையில் வைத்திருந்த பணத்தை வீசினார். வீசப்பட்ட பணத்தை பறக்கும் படை அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள் உள்ளிட்ட குழுவினர் கைப்பற்றினர். அதில் ரூ.79 ஆயிரம் இருந்தது. அதைக் கைப்பற்றிய பறக்கும்படையினர் அதுதொடர்பாக மனோகரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x