Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் தயார் செய்யும் பணி :

ஆம்பூரில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்கள் தயார் செய்யும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் சிவன் அருள்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் செய்யும் பணியை ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில் 335, வாணியம்பாடியில் 361, ஆம்பூர் தொகுதியில் 335, ஜோலார்பேட்டை தொகுதியில் 340 என மொத்தம் 1371 வாக்குச்சவாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஒவ்வொரு வாக்குப்பதிவுக்கும் தேவையான 103 தேர்தல் பொருட்கள் அடங்கிய பைகள் தயார் செய்து வைத்துள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கான பைகளை முழுமையாக சரிபார்த்து அனுப்ப தேவையான நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல், கரோனா தடுப்பு பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய 17 பொருட்களும் அனுப்பி வைக்க உள்ளனர். இப்பணிகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x