தேர்தல் பணியில் ஈடுபடும் 200 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி :

தேர்தல் பணியில் ஈடுபடும் 200 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் தொகுதியில் 340 வாக்குச் சாவடிகள், வில்லி.தொகுதியில் 357, சாத்தூர் தொகுதியில் 351, சிவகாசி தொகுதியில் 368, விருதுநகர் தொகுதியில் 325, அருப்புக்கோட்டை தொகுதியில் 311, திருச்சுழி தொகுதியில் 318 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 2,370 வாக்குச் சாவடிகள் உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாரிகள் மூலம் வாக்குச் சாவடி மையங்களுக்கு நாளை (ஏப்.5) அனுப்பி வைக்கப்பட உள்ளன. அந்த லாரிகளுடன் மண்டல தேர்தல் அலுவலர்களும் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள்.மண்டல தேர்தல் அலுவலர்களின் வாகனங்களை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கும் வகையில் 200 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in