வாக்குப்பதிவு உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி :

வாக்குப்பதிவு உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி :

Published on

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு தேவையான படிவம், எழுதுபொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்குப் பிரித்து, ஒதுக்கீடு செய்யும் பணி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இப்பணியை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலு வலருமான வே.சாந்தா ஆய்வு செய்தார்.

அப்போது, திருத்துறைப் பூண்டி தொகுதிக்குட்பட்ட 336 வாக்குச்சாவடிகளுக்கு உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப் படுவதை பார்வையிட்ட அவர், தேவையான எண்ணிக்கையில் படிவங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்தார்.

முன்னதாக, திருத்துறைப் பூண்டி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணி யாற்றவுள்ள அலுவலர்களுக் காக, திருத்துறைப்பூண்டி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பை ஆட்சியர் பார்வை யிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in