இன்றிரவு 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவு :

இன்றிரவு 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவு :
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றிரவு 7 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உட்பட 122 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், 10 பேர் பெண்கள்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்று (4-ம் தேதி) இரவு 7 மணியுடன் நிறைவு பெறுகிறது.

இதேபோல், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in