நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நூதன பிரச்சாரம் :

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நூதன பிரச்சாரம் :
Updated on
1 min read

திருப்பூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று நூதனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. திருப்பூர்தெற்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகசுந்தரம், ஊத்துக்குளி சாலையிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் இணைந்து, பின்னலாடை நிறுவனத்தில் துணி வெட்டியும், அயனிங் டேபிளில் துணியை தேய்த்தும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதேபோல, திருப்பூர் வடக்கு தொகுதி போட்டியிடும் ஈஸ்வரன், 15 வேலம்பாளையம் பகுதியில் சாக்கடை அடைப்பை நேற்று சுத்தம் செய்தும், பிரிண்டிங் நிறுவனத்தில் தொழிலாளர்களிடம் பிரிண்டிங் செய்தும் வாக்கு சேகரித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in