Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

ராமநாதபுரத்தில் முகக்கவசம் அணியாத - அரசு பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் :

ராமநாதபுரத்தில் முகக்கவசம் அணியாத அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஆட்சியர் அபராதம் விதித்தார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 38 பேர் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால், கரோனா தொற்றைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகக் கவசம் அணியாதோர், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதோருக்கு ரூ.200-ம் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 5,000-ம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் சாலை தெரு, மதுரை சாலை உள் ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது அவர் ராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளைத் தடுத்து நிறுத்தி பயணிகள் முகக் கவசம் அணிந்தி ருக்கின்றனரா என சோதனை யிட்டார். சோதனையின் போது சில அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்கள், நடத்து நர்கள் கூட முகக்கவசம் அணியாமலிருந் தனர். அவர்களை கண்டித்த ஆட்சியர், முகக்கவசம் அணியாத ஓட்டுநருக்கு அபராதமும் விதித்தார்.

ஆய்வின்போது ராமநாதபுரம் சார்ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, வட்டாட்சியர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் என்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x