Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

மார்க்சிஸ்ட் வேட்பாளராக போட்டியிடும் சாமானியரை வெற்றிபெற செய்யுங்கள் : முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பிரச்சாரம்

திண்டுக்கல் நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக மாநில துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி.

திண்டுக்கல்

திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சாமானியரை வெற்றிபெற செய்யுங்கள் என, திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து பேகம்பூரில் ஐ.பெரியசாமி பேசியதாவது:

ஆதிக்க சக்தியாக, ஆணவமாக பாஜக உருவெடுத்துள்ளது. அரசு நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இங்கு போட்டியிடும் பாண்டியை எந்த நேரமும் நீங்கள் சந்திக்கலாம். எளிமையானவர், சாமானியர். அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். அதிமுக கூட்டணி நயவஞ்சகமான கூட்டணி. உங்கள் வாக்கு ஜனநாயகத்தை பாதுகாக்கும். சாமானிய வேட்பாளருக்கு சாதனை வெற்றியை திண்டுக்கல் மக்கள் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளர் பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, முன்னாள் நகராட்சித் தலைவர் பஷீர் அகமது மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x