பனியன் நிறுவன தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது :

பனியன் நிறுவன தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது :
Updated on
1 min read

திருப்பூர் கொங்கு பிரதான சாலையைச் சேர்ந்தவர் அன்பரசன் (34).பனியன் நிறுவனத் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

கொங்கு பிரதான சாலை ரங்கநாதபுரம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை அருகே அன்பரசனுக்கும், முருகனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, முருகன் (33), ஜெகன் (29), நாகராஜ் (30), ஐயப்பன் (எ) ராஜ் (31) ஆகியோர் அன்பரசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த அன்பரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்பரசன் அளித்த புகாரின்பேரில் முருகன், ஜெகன், நாகராஜ், ஐயப்பன் (எ) ராஜ் ஆகியோரை வடக்கு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in