Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

காஞ்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் - தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி :

காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் சவீதா கல்லூரியில் பயிலும் தொழில் முறை சிகிச்சை நிபுணர்களின் தேர்தல் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பார்வையிட்டார். மாற்றுத் திறனாளிகளுடன் வாக்காளர் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார். பின்னர் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. அதையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாதிரி வாக்குப் பதிவு மையத்தில் மாற்றுத் திறனாளிகள் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x