Published : 31 Mar 2021 03:16 AM
Last Updated : 31 Mar 2021 03:16 AM

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாட்டு பணிகள் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஆலந்தூர், பெரும்புதூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தேர்தல் முடிந்ததும் இந்தத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை வைப்பதற்கான அறைகள், தடுப்புக் கட்டைகள் ஆகியவை தயார் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், பொதுப்பணித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x