Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

ஆ.ராசா உருவ பொம்மை எரிப்பு அதிமுகவினர் 72 பேர் மீது வழக்கு :

அண்மையில் தமிழக முதல்வர் கே.பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக துணைப் பொதுச் செயலர் ஆ.ராசா மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பஜார் மற்றும் ஆரணி பஜார் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை அதிமுகவினர் போராட்டம் நடத்தி, ஆ.ராசாவின் உருவபொம்மைக்கு தீவைத்து எரித்தனர். இது தொடர்பாக திருமழிசை நகரச் செயலர் ரமேஷ் உள்ளிட்ட 41 அதிமுகவினர் மீது வெள்ளவேடு போலீஸாரும், ஆரணி நகரச் செயலர் தயாளன் உள்ளிட்ட 31 அதிமுகவினர் மீது ஆரணி போலீஸாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x