திண்டுக்கல் பாரதிபுரத்தில் - ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் :

சர்வ அலங்காரதத்தில் காட்சியளித்த  ஷீரடி சாய்பாபா.
சர்வ அலங்காரதத்தில் காட்சியளித்த ஷீரடி சாய்பாபா.
Updated on
1 min read

திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு மகாசங்கல்பம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவற்றுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து வருண வழிபாடு, குலதெய்வ வழிபாடு, யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை, மஹா பூர்ணாகுதி, வேதபாராயணம், கோபுர கலசம் பிரதிஷ்டை உள்ளிட்டவை நடைபெற்றன.

நேற்று காலை விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சாய்பாபா திருவுருவத்துக்கு புஷ்பாஞ்சலி மற்றும் மங்கள ஆரத்தி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in