சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் - இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் திண்ணை பிரச்சாரம் :

சிவகங்கை தொகுதி ஒக்கூரில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன்.
சிவகங்கை தொகுதி ஒக்கூரில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன்.
Updated on
1 min read

சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் கிராமங்களில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தனது கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் கிராமங்களில் வீடு, வீடாகச் செல்லும் வேட்பாளர் குணசேகரன் திண்ணை யில்அமர்ந்து பெண்களிடம் கலந்துரையாடுகிறார். அவர்கள் கூறும் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளிக்கிறார்.

சிவகங்கை அருகே ஒக்கூர், மதகுபட்டி, கருங்காலக்குடி, பிரவலூர் உள்ளிட்ட கிராமங்களில் திண்ணைப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவரிடம் பேசிய பெண்கள், ‘ 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். கூலியை உயர்த்தி உடனுக்குடன் வழங்க வேண்டும், எனக் கேட்டு கொண்டனர்.

இதையடுத்து குணசேகரன் பேசுகையில், ‘‘நான் வெற்றி பெற்றால் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்,’’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in