விருதுநகரில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு :

விருதுநகர் மேலரத வீதியில் பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்.
விருதுநகர் மேலரத வீதியில் பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்.
Updated on
1 min read

விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தார்.

விருதுநகர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.வான ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். விருதுநகர் மேலரத வீதியில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அரசின் நடவடிக்கைகள் குறித்தும், திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படவுள்ள நலத் திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறி, பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறை வேற்றப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in