விருதுநகரில் நமீதா பிரச்சாரக் கூட்டத்தில் - மதுபோதையில் கேள்வி கேட்டவர் மீது தாக்குதல் :

விருதுநகரில் நமீதா பிரச்சாரக் கூட்டத்தில் -  மதுபோதையில் கேள்வி கேட்டவர் மீது தாக்குதல் :
Updated on
1 min read

விருதுநகரில் பாஜக வேட் பாளரை ஆதரித்து நடிகை நமீதா மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில், மதுபோதையில் கேள்வி கேட்டவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாண்டுரங்கனுக்கு ஆதரவாக நடிகை நமீதா, பழைய பேருந்து நிலையம் அருகே வாக்குச் சேகரித்தார். அதைத்தொடர்ந்து எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அருகே பேசியபோது, ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அதில் நீங்கள் பிரியாணி சமைத்து சாப்பிடலாம். அப்போது என்னையும் கூப்பிடுங்கள். நானும் வருகிறேன் என்று நகைச்சுவையுடன் கூறி னார். மேலும் பெண்களுக்கு இலவசமாக வாஷிங் மிஷின் வழங்கப்படும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகள் குறித்து பேசினார்.

அப்போது மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர், "இதெல்லாம் வராது. இது வரைக்கும் கொடுத்தீர்களா" என்றார். அவரை பாஜகவினர் தாக்கினர். பின்னர் சிலர், அவர்களை சமாதானப்படுத்தி இளைஞரை மீட்டு அனுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in