Published : 28 Mar 2021 03:18 AM
Last Updated : 28 Mar 2021 03:18 AM

தா.பழூர் பகுதிகளில் அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு :

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி களில் அமமுக வேட்பாளர் துரை.மணிவேல் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். நாச்சியார்பேட்டை, மணகெதி, பொட்டக்கொல்லை, த.மேலூர், கீழவெளி, பொட்டாங்காடு, கைக்கலத்தெரு, சமத்துவபுரம், நடுவெளி, வளவெட்டி குப்பம், த.குடிக்காடு, மேலவரப்பன் குறிச்சி, காமரசவல்லி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று துரை.மணிவேல் வாக்கு சேகரித்தார்.

அப்போது, என்னை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்தால், தத்தனூர் பொட்டக்கொல்லையில் அரசு முந்திரித் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x