சிமென்ட் ஆலை லாரிகளுக்கு தனி சாலை: அதிமுக வேட்பாளர் :

சிமென்ட் ஆலை லாரிகளுக்கு தனி சாலை: அதிமுக வேட்பாளர் :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு தனிச் சாலை அமைக்கப்படும் என அரியலூர் தொகுதியில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளர் தெரிவித்தார்.

சிறுவளூர், புதுப்பாளையம், கருங்காலிகொட்டாய், நெருஞ் சிக்கோரை, ஆரனூர், நாயக்கர்பாளையம், ரெட்டிப் பாளையம், மயிலாண்டகோட்டை, வி.கைகாட்டி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட தாமரை எஸ்.ராஜேந்தி ரன் பேசும்போது, தனக்கு வாக்க ளித்து வெற்றிப் பெறச் செய்தால், சிமென்ட் ஆலை மற்றும் சுரங்கங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு என தனிச் சாலை அமைக்கப்படும். தூத் தூரில் தடுப்பணை கட்டப்படும் என்று உறுதியளித்தார். பிரச்சாரத்தில் பாமக, தமாகா, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, வாக்கு சேகரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in