காஞ்சிபுரத்தில் தேர்தல் சோதனையில் ரூ.4.4 லட்சம் பறிமுதல் :

காஞ்சிபுரத்தில்  தேர்தல் சோதனையில் ரூ.4.4 லட்சம் பறிமுதல் :
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் பறக்கும் படை அலுவலர் காயத்திரி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்தனர். அதில் ரூ.3.5 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே பகுதியில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் ரமணி தலையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கார் ஒன்றில் இருந்து ரூ.70 ஆயிரம் ரொக்கம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையான ரூ.4.2 லட்சம் ரொக்கம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in