பரமக்குடியில் கொத்தனார் கொலை :

பரமக்குடியில் கொத்தனார்  கொலை  :
Updated on
1 min read

மதுரையில் நண்பர்கள் தாக்கியதில் கொத்தனார் உயிரிழந்தார்.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த தேவதாஸ் மகன் ஜெயச்சந்திரன் (36). கொத்தனாரான இவர் பரமக்குடி அருகேயுள்ள தோளூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தினமும் பரமக்குடி வந்து வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு பரமக்குடி பாலன் நகர் கண்மாய் கரையில் மது அருந்திவிட்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுதொடர்பாக பரமக்குடி நகர் இன்ஸ்பெக்டர் சேது மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் சேதுபதி (21), வசந்தபுரத்தைச் சேர்ந்த போஸ் மகன் ராஜா(38), ஆற்றுப்பாலம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் கார்த்தி(24) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in