

சேலத்தில் குடும்பத் தகராறில் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் பனமரத்துப்பட்டி அடுத்த கம்மாளப்பட்டி வடக்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் வெல்டிங் பட்டறை தொழிலாளி முத்துக்குமார் (25). இவரது மனைவி ஸ்டெபியா (24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மகன்அனித் (3). இந்நிலையில், நேற்று காலை வீட்டின் அருகே ஸ்டெபியாவும், அனித்தும் விஷம் அருந்திய நிலையில் உயிரிழந்து கிடந்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற பனமரத்துப்பட்டி போலீஸார் இருவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக ஸ்டெபியா தனது மகனுக்கு விஷத்தை கொடுத்து கொன்று விட்டு, அவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இருப்பினும் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால் சேலம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.