சர்ச்சைக்குரிய பேச்சு நாமக்கல் எம்எல்ஏ வருத்தம் :

சர்ச்சைக்குரிய பேச்சு நாமக்கல் எம்எல்ஏ வருத்தம் :
Updated on
1 min read

தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாமக்கல் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் கடந்த 20-ம் தேதி நாமக்கல் - மோகனூர் சாலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்காவிட்டால் வாக்காளர் கள் நல்ல சாவு அடையமாட்டார்கள் என பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜிடம், திமுகவினர் புகார் அளித்தனர்.

இச்சூழலில் தனது பேச்சுக்கு எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். அறிக்கையில், திமுகவினரை மனதில் வைத்து பிரச்சாரத்தில் பேசினேன். எனினும் உண்மையில் மனம் வருந்துகிறேன்.

என் பேச்சால் யார் மனதும் புண்பட்டிருந்தால் அதற்காக நாமக்கல் தொகுதி மக்களிடம் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in