Published : 26 Mar 2021 03:17 AM
Last Updated : 26 Mar 2021 03:17 AM

புதுக்கோட்டையில் - 6 கிலோ தங்கம் பறிமுதல் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ தங்க நகைகளை தேர்தல் அலுவலர்கள் நேற்று பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட புறநகர் பகுதியான கேப்பறை எனும் இடத்தில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஒரு பிரபல நகைக்கடைக்குச் சொந்தமான ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பிலான 6 கிலோ தங்க நகைகள் பல்வேறு இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு விநியோகிப்பதற்காக எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. எனினும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நகைகளைக் கொண்டு வந்த ராஜேஷ் கண்ணன் என்பவரிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமார் விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x