Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM

ராமநாதபுரம் தொகுதியில் கமல் கட்சி வேட்பாளருக்காக காத்திருக்கும் தொண்டர்கள் :

கே.பி. சரவணன்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கே.பி.சரவணன் அமைதியாக இருப்பது அந்தக் கட்சியினரையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசன் தனது சொந்த மண்ணான ராமநாதபுரம் தொகுதியில் நிற்க வேண்டும் என அவரது தொண்டர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக மக்கள் நீதி மய்யக் கூட்டணியில் ஜனநாயகத் திமுக கட்சியின் தலைவா் கே.பி.சரவணன் அறிவிக்கப்பட்டார். இவரது சொந்த ஊா் திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி. இவர் திருப்பூாில் ஜவுளி தொழில் செய்து வருகிறார்.

ராமநாதபுரம் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 18 ஆம் தேதி கே.பி.சரவணன் ராமநாதபுரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நடுவக்குறிச்சிக்கு சென்றார்.

இதுகுறித்து வேட்பாளா் கே.பி.சரவணனிடம் கேட்டபோது, கட்சித் தலைவா் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ராமநாதபுரத்தில் புதன்கிழமை (நேற்று) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவருக்கு கால் வலியிருந்த காரணத்தால் ரத்தாகி விட்டது. வியாழக்கிழமையிலிருந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x