Published : 25 Mar 2021 03:16 AM
Last Updated : 25 Mar 2021 03:16 AM

அரியலூர் அருகே - ஓடை தடுப்பணையில் மூழ்கி2 சிறுமி, ஒரு சிறுவன் உயிரிழப்பு :

அரியலூர்

அரியலூர் அருகே ஓடை தடுப்பணையில் மூழ்கி 2 சிறுமி, ஒரு சிறுவன் என 3 பேர் நேற்று உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த மணப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுதாகர், ஜெயசீலன். சகோதரர்களான இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். சுதாகருக்கு சுடர்விழி(7) என்ற மகளும், ஜெயசீலனுக்கு சுருதி(10), ரோகித்(7) என 2 குழந்தைகளும் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று 3 பேரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவர்களை அக்கம் பக்கத்தில் தேடினர்.

அப்போது, வீட்டின் அருகேயுள்ள சின்ன ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் நீரில் மூழ்கி 3 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த செந்துறை போலீஸார் சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x