குழந்தையுடன் தந்தை ஆற்றில் குதித்து தற்கொலை :

குழந்தையுடன் தந்தை ஆற்றில் குதித்து தற்கொலை :
Updated on
1 min read

ஒன்றரை வயது மகனுடன் இளைஞர் பள்ளிபாளையம் பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரி்க்கின்றனர்.

பள்ளிபாளைம் அக்ரஹாரத் தைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). இவருக்கு ரம்யா என்ற மனைவி, ஒன்றரை வயதுள்ள இனியவன் என்ற மகன் உள்ளனர். இவர் கத்தாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் சுரேஷ் சொந்த ஊர் திரும்பி இங்கு சுய தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை தனது மகன் இனியவனுடன் பள்ளிபாளையம் பழைய பாலம் மீது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர், பாலத்தின் ஓரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திய சுரேஷ் தனது மகனுடன் காவிரி ஆற்றில் திடீரென குதித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் கூச்சல் எழுப்பியதையடுத்து பரிசல் மூலம் இருவரையும் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், இருவரும் சடலமாகவே மீட்கப்பட்டனர். பள்ளிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முதுகு வலி பிரச்சினையால் சுரேஷ் அவதிக்குள்ளாகி வந்துள்ளார். மருத்துவ சிகிச்சை மேற்கொண்டபோதும் குணமாகவில்லை. இதன் கார ணமாக அவர் தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in