குடவாசல் ஒன்றியத்தில் அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு :

குடவாசல் ஒன்றியத்தில் அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு  :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச் சர் ஆர்.காமராஜ், குடவாசல் ஒன்றியத்தில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, ஆத்தூரில் அவர் பேசியது: முதல்வர் பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையின்போது, மக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2,500 வழங்கப்பட்டது. விவ சாய கடன்கள் தள்ளுபடி செய் யப்பட்டுள்ளன.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் கல்விக் கடன் தள் ளுபடி செய்யப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 காப்புத் தொகையாக வழங் கப்படும். ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். வீடுதோறும் வாஷிங்மெஷின் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் அளித்துள்ளார்.

இந்த வாக்குறுதிகள் தேர்த லுக்குப் பின்னர் உடனடியாக நிறைவேற்றப்படும். ரேஷன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in